டிமென்சியா என்றால் என்ன?
டிமென்சியா என்பது ஒரு தனிக்குறைபாடு அல்ல. மூளையின் திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்பட்டிருக்கிற சேதம் காரணமாக ஏற்படுகிற பல்வேறு அறிகுறிகளை இது உள்ளடக்கியிருக்கிறது. இந்தச் சேதத்தால் மக்கள் அல்சைமர்ஸ் அல்லது பார்க்கின்சன் போன்ற சிதைவுக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான அறிகுறிகள்: ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், சிந்தித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலில் சிரமங்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் சிரமப்படுதல், மொழிக் குறைபாடுகள் போன்றவை. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலாமல் சிரமப்படுகிறார்கள்.
டிமென்சியா படிப்படியாக வளரக்கூடிய ஒரு குறைபாடு. அதாவது இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டபின் ஒருவருடைய நிலை படிப்படியாக மோசமாகி விரைவில் அவர்கள் மரணத்தைச் சந்திக்க நேரிடும்.
குறிப்பு: "டிமென்சியா இந்தியா அறிக்கை"யின்படி நம் நாட்டில் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் டிமென்சியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2030 ஆண்டிற்குள் இந்த எண் இரு மடங்கு ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது டிமென்சியா அல்ல?
டிமென்சியாவின் வகைகள்
டிமென்சியாவில் பல வகைகள் உண்டு; இவை ஒவ்வொன்றுக்கும் அதனை உண்டாக்கும் நோய் அல்லது நிலையின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டிமென்சியாவின் அறிகுறிகள் என்ன?
டிமென்சியாவின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். அவர்களுடைய மூளையின் எந்தப்பகுதி எதனால் சேதமடைந்துள்ளது என்பதைப் பொறுத்து இந்த அறிகுறிகள் மாறும். டிமென்சியா பிரச்னை கொண்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அறிகுறிகளை உணர்வார்கள், ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய சிரமங்கள் வெவ்வேறு விதமாக அமையும். டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவர் பின்வரும் விஷயங்களில் சிரமத்தைச் சந்திக்கலாம்:
சில குறிப்பிட்ட வகை டிமென்சியாக்களுக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உண்டு:
டிமென்சியா எப்படிக் கண்டறியப்படுகிறது?
டிமென்சியாவைக் கண்டறிவதற்குத் தனிப்பட்ட பரிசோதனை என்று எதுவுமில்லை. ஆகவே மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவ வரலாறை ஆராய்கிறார்கள், அவருடைய பழக்கவழக்கங்களில் உள்ள மாற்றங்களைக் கவனிக்கிறார்கள், இவற்றோடு சில ஆய்வகப் பரிசோதனைகளையும் நிகழ்த்தி அதன்மூலம் அவருக்கு டிமென்சியா பிரச்னை இருப்பதைக் கண்டறிகிறார்கள்.
ஒருவருக்கு டிமென்சியா பிரச்னை இருப்பதை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது. இதன் மூலம் அவர்கள் தங்களுக்கு என்ன பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளலாம், வருங்காலத்திற்காகத் தயாராகலாம், திட்டமிடலாம், நிலைமையைச் சமாளிப்பதற்குக் குடும்ப உறுப்பினர்களின் உதவியைப் பெறலாம், தினசரிச் செயல்பாடுகளை இயன்றவரை சிறப்பாகக் கையாளலாம்.
டிமென்சியாவிற்காக நிகழ்த்தப்படும் சில பரிசோதனைகள்:
அறிவாற்றல் மற்றும் நரம்பு இயற்பியல் பரிசோதனைகள்: ஞாபகசக்தி, நோக்குநிலை, புரிந்து கொள்ளுதல், தீர்மானம் எடுத்தல் மற்றும் மொழி ஆகியவற்றில் பரிசோதனைகளை நடத்தி, அதன் அடிப்படையில் ஒருவருடைய அறிவாற்றல் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.
நரம்புத் தர்க்கவியல் மதிப்பீடு: மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவரின் அசைவு, உணர்வு, நிலைத் தன்மை மற்றும் அனிச்சை எதிர்வினை ஆகியவற்றைப் பரிசோதிக்கிறார்கள்.
மூளை ஸ்கேன்: பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு கணிணி மயமாக்கப்பட்ட டோமோகிராபி (CT) ஸ்கேன் அல்லது மேக்னடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் (MRI) செய்யப்படுகிறது. இதன் மூலம் அவருக்குப் பக்கவாதம் வந்திருக்கிறதா அல்லது மூளையில் உள் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அவர்கள் ஆராய்கிறார்கள், அவருக்கு மூளையில் கட்டி ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.
உளவியல் மதிப்பீடு: ஒரு மனநல நிபுணர் பாதிக்கப்படவரிடம் பேசி அவருக்கு மனச் சோர்வு அல்லது வேறு உளவியல் பிரச்னைகள் உள்ளனவா, அதன் மூலம் இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று பரிசோதிக்கிறார்.
டிமென்சியாவிற்குச் சிகிச்சை பெறுதல்
டிமென்சியாவிற்குச் சிகிச்சை அளிக்கவோ குணப்படுத்தவோ இயலாது. காரணம் டிமென்சியாவை ஏற்படுத்தும் நோய்கள் படிப்படியாக வளர்பவை, அதாவது பாதிக்கப்பட்டவருடைய நிலைமை படிப்படியாக மோசமாகிக் கொண்டே தான் செல்லும். அதே சமயம் பாதிக்க்ப்பட்டவர் தன்னுடைய அறிகுறிகளைக் கையாள்வதற்கு மருத்துவர்கள் உதவலாம். டிமென்சியாவுடன் இருக்கக்கூடிய மனச் சோர்வு அல்லது பதற்றம் போன்ற பிற பிரச்னைகளுக்குச் சிகிச்சை தேவைப்படலாம்.
மருத்துவர்களும் குடும்ப உறுப்பினர்களும், டிமென்சியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரால் என்னென்ன வேலைகளைச் செய்ய இயலுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும், அவற்றைத் தொடர்ந்து செய்யுமாறு அவரை ஊக்கப்படுத்தவேண்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிற சிகிச்சை குடும்ப உறுப்பினர்களின் அன்பு, ஆதரவு மற்றும் அக்கறைதான்.
டிமென்சியாவைத் தடுக்க இயலுமா?
டிமென்சியாவைத் தடுக்க இயலாது என்று தான் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதே சமயம் டிமென்சியா வருவதைத் தாமதப்படுத்துவதற்கு நாம் சில விஷயங்களைச் செய்யலாம். இது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையடையவில்லை, மேலும் பல விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது.
பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்:
டிமென்சியா பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்
ஒருவருக்கு டிமென்சியா வந்திருப்பது கண்டறியப்படும்போது அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைவது சகஜம். டிமென்சியாவின் ஆரம்பக் கட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த ஆதரவும் நம்பிக்கையும் தேவை, அப்போதுதான் அவர்களுடைய வாழ்க்கை இயன்றவரை எளிதாகவும் சமாளிக்கக்கூடியதாகவும் அமையும். ஒருவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் டிமென்சியா இருந்தால் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கு இந்த ஆலோசனைகளில் சிலவற்றைப் பின்பற்றலாம். அதே சமயம் இந்த ஆலோசனைகளைச் சம்பந்தப்பட்ட நபரின் நிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்துவது நல்லது. இவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் டிமென்சியா படிப்படியாக வளர்கின்ற தன்மையைக் கொண்டது, அதன் அறிகுறிகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும்.
கவனித்துக் கொள்பவரைக் கவனித்துக் கொள்ளுதல்
டிமென்சியா பிரச்னை வந்த தன்னுடைய அன்புக்குரிய ஒருவரைக் கவனித்துக் கொள்கிறவருக்கு மன அழுத்தம், எரிச்சல், உடல் மற்றும் உணர்வு நிலையில் களைப்பு ஏற்படுவது சாத்தியம். இவர்களுக்கு அடிக்கடி கோபம், குற்ற உணர்ச்சி, சோகம், சுய இரக்கம், பதற்றம் மற்றும் தனக்கு யாரும் உதவுவதில்லை என்கிற எண்ணம் போன்றவை கலந்து ஏற்படலாம். இந்தக் கடினமான நிலையைக் கடந்து முன்னேறுவதற்கு அவர்கள் தங்களுடைய உடல் நலம் மற்றும் மன நலத்தைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.