உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி நாள்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள், உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார் என்று சிந்தியுங்கள். அவர் ஏன் விசேஷம்? அவரை உங்களுக்கு ஏன் அந்த அளவு பிடித்தது? சிலர் பிரமாதமாகப் பாடம் நடத்தி நம் மனத்தில் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் இன்னும் சிலர் தங்களுடைய ஆதரவான நடவடிக்கைகளாலேயே நம் நினைவில் நின்றிருப்பார்கள். மாணவர்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் காதுகொடுத்துக்கேட்டிருப்பார்கள், ஆகவே, நாம் அவர்களை இன்னும் நினைவில்வைத்திருப்போம். பொதுவாக, மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் இந்த இரு குணங்களுமே இருக்கும்.
மாணவர்கள் தங்களுடைய வளரும்பருவத்தில் பாதியைப் பள்ளியில், கல்லூரியில்தான் செலவிடுகிறார்கள். ஆகவே, மாணவர்களுடைய ஆளுமையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஒரு முக்கியப் பங்காற்றுகிறார்கள். சில பள்ளிகளில், பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் என்று தனியே சிலர் இருப்பார்கள். பெற்றோருடன் உறவு முறிவுகள், உறவு பாதிப்புகள், சுயமதிப்புப் பிரச்னைகள், உடல்-தோற்றப் பிரச்னைகள், தீய பழக்கங்கள், தற்கொலைச் சிந்தனை, எந்தத் துறையில் கவனம் செலுத்துவது என்கிற குழப்பம் போன்ற பிரச்னைகளால் திணறும் மாணவர்களுக்கு உதவிசெய்வார்கள். அதேசமயம், அவர்களுடன் ஒப்பிடும்போது, ஓர் ஆசிரியர் மாணவர்களுடன் அதிகநேரம் இருக்கிறார், எப்போதும் தொடர்பில் உள்ளார், ஆகவே, அவரும் மாணவர்களிடம் இதுபற்றிய பேச்சுகளைத் தொடங்கலாம், அவர்களைப் பேசுமாறு ஊக்குவிக்கலாம். இதனால், பள்ளி, கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களே வேண்டிய ஆலோசனைகளை வழங்கலாம்.
இந்தியாவில் மேல்நிலைக்கல்விக்கான மத்திய வாரியம் (CBSE), தனது எல்லைக்குட்பட்ட பள்ளிகளில் முழுநேரமும் வளாகத்திலேயே இருக்கிற ஆலோசகர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று சிபாரிசு செய்கிறது. என்றாலும், இதைப் பலர் அமல்படுத்துவதில்லை. சிலநேரங்களில், பள்ளி நிர்வாகத்துக்கு இதில் ஆர்வம் இருப்பதில்லை, அப்படியே ஆர்வம் இருந்தாலும், பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் கிடைப்பதில்லை. இன்னொரு சவால், மாணவர்களுக்குப் பிரச்னை வரும்போது, அவர்கள் பள்ளி ஆலோசகர்களைச் சென்று சந்திக்கவேண்டுமே, அதற்கு யார் பொறுப்பு? இந்த இடைவெளியை ஆசிரியர்கள் சிறப்பாக நிரப்பலாம். மாணவர்களின் நம்பிக்கையைப்பெற்ற, அவர்களை அனுதாபத்துடன் அணுகுகிற ஓர் ஆசிரியர், இதுபோன்ற விஷயங்களில் அவர்களை ஆதரிக்கலாம், தேவைப்பட்டால், அவர்களைப் பள்ளி ஆலோசகரிடம் அனுப்பிவைக்கலாம். அதேசமயம், எல்லா ஆசிரியர்களாலும் இந்தப் பணியைச் செய்துவிட இயலாது.
யாரால் இயலும்?
மாணவர்கள் அத்தனை சுலபத்தில் தங்கள் பிரச்னையை ஓர் ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டுவிடமாட்டார்கள். ஆகவே, ஆசிரியர்கள் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும், உதவிசெய்யத் தயாராக இருக்கவேண்டும். ஓர் ஆசிரியரிடம் மாணவர்கள் மனத்தைத் திறந்து பேசவேண்டுமென்றால், அவர்கள் மனத்தில் அவரைப்பற்றி நம்பிக்கை வரவேண்டும். இது மிகவும் அவசியம்.
மாணவர்கள் ஓர் ஆசிரியருடன் பேசவேண்டுமென்றால், அவர்களுக்குச் சில குறிப்பிட்ட குணங்கள் இருக்கவேண்டும். உதாரணமாக:
ஒரு மாணவர் ஏதோ பிரச்னையோடு ஓர் ஆசிரியரை அணுகினால், அவர் என்ன செய்யவேண்டும்?
அத்துடன், பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர்களைக் கவனித்து, அவர்களில் யாருக்கெல்லாம் பயிற்சி தந்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக ஆக்கலாம் என்று தீர்மானிக்கலாம்.
பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் தலைமை ஆலோசகரான டாக்டர் உமா வாரியர் ஆலோசனைகளுடன் இந்த உள்ளடக்கம் உருவாக்கப்பட்டது.