எழுதியவர்: டாக்டர் கரிமா ஶ்ரீவஸ்தவா
தேர்வுகள் என்றாலே, நம்மில் பலருக்கு அழுத்தம் வந்துவிடும், பதற்றம் வந்துவிடும். அழுத்தம் என்பது தவறல்ல, சாதாரணமான அழுத்தம் ஒருவருடைய வேலைக்கு உதவும், அவரை வேகமாகச் சிந்திக்கச்செய்யும், சிறப்பாகச் செயல்படச்செய்யும், அவரது செயல்திறனை மேம்படுத்தும். இதுபற்றிய அனுபவ ஆய்வுகள், ஒரு குறிப்பிட்ட அளவு (சரியான அளவு) அழுத்தமானது ஒருவரை இன்னும் சிறப்பாகச் செயல்படச்செய்யலாம் என்கின்றன. ஆனால், சில நேரங்களில், பதற்றம் மிகவும் அதிகமாகிவிடுகிறது, ஒருவருடைய செயல்திறனைப் பாதிக்கத்தொடங்கிவிடுகிறது. நம்மில் பலருக்கு, தேர்வு தொடர்பான பதற்றம் இருக்கிறது. ஆகவே, அதன் அடையாளங்களைக் கண்டுகொண்டு, அதனைச் சிறப்பாகக் கையாளுவது மிகவும் அவசியம். பதற்றம் எதனால் உண்டாகிறது என்பதைத் தெரிந்துகொண்டால், பதற்றத்தைக் குறைப்பது சாத்தியம். அதன்பிறகு, பதற்றத்தைக் கட்டுப்படுத்தலாம், மற்ற வேலைகளைக் கவனிக்கலாம். பதற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்:
தேர்வுக்குமுன்னால் உங்களிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனைத் தேர்வுக்குமுன், தேர்வின்போது என்று பிரித்துக்கொண்டு செயல்படலாம்.
தேர்வுக்குமுன்னால்:
தேர்வின்போது:
பெரும்பாலான தேர்வுகளில், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பாக வினாத்தாளை வாசிக்க நேரம் தரப்படும். இந்த நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்:
எழுத ஆரம்பித்தபிறகு, இந்தத் திட்டத்தை மாற்றக்கூடாது. உங்களுடைய பதில்கள் பொருத்தமாக, சரியாக இருக்கட்டும்.
வாழ்த்துகள்!
டாக்டர் கரிமா ஸ்ரீவஸ்தவா டெல்லியைச் சேர்ந்த மருத்துவ உளவியலாளர், அகில இந்திய மன அறிவியல் கழகத்தில் PhD பெற்றவர்.