இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் பெற்றோரின் வீடுகளிலிருந்து வெளியேறுகிறார்கள். அது வளர்ச்சியின் ஓர் இயல்பான பகுதி, அவர்கள் பெரியவர்களாவதைக் காட்டும் நிகழ்வு. இன்றைய இளைஞர்கள் பிற நகரங்கள் அல்லது நாடுகளுக்குச் சென்று மேலே படிப்பதும், நல்ல வேலைகளைத் தேடிக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. சிலருக்கு இது மகிழ்ச்சி தருகிறது. காரணம், அவர்கள் சுதந்தரத்தை விரும்புகிறார்கள், புதிய அனுபவங்களைத் தேடுகிறார்கள். ஆனால் வேறு சிலருக்கு, இது திகைப்பூட்டுகிற சவாலாகவும் இருக்கலாம்.
ஒரு புதிய இடத்துக்குச் சென்று தன்னைப் பொருத்திக்கொள்வது, புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது, முக்கியத்துவங்களை மாற்றியமைப்பது, ஒரு சமூக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வது போன்றவை இந்த நேரத்தில் நடைபெறுகின்றன. சில இளைஞர்கள் கல்லூரிகளில் தங்கிப் படிக்கவேண்டியிருக்கிறது, நேராநேரத்துக்கு எழுந்து வேலைகளைச் செய்வதும் விதிமுறைகளும் அவர்களுக்குப் புதியவையாக, கவலையுண்டாக்குபவையாக இருக்கலாம். இன்னும் சிலர் சுதந்தரமாக வாழ்கிறார்கள், அதற்கான செலவுகளைச் சமாளிக்கும் அழுத்தம் அவர்களைப் பாதிக்கக்கூடும். எப்போதும் தன் பெற்றோரிடமிருந்து தனியே வசித்திராத ஒருவர்:
இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கச் சில வழிகள் இங்கே:
பெரும்பாலான திகைப்பூட்டும் எண்ணங்களும் பயங்களும் தாற்காலிகமானவை, சரியான சமாளிக்கும் உத்திகளின்மூலம் அவற்றை வென்றுவிடலாம். அதேசமயம், இந்த எண்ணங்கள், உணர்வுகள் தொடர்ந்து நீடித்தால், தினசரி வாழ்க்கையைப் பாதிக்கத்தொடங்கினால், ஒரு மன நல நிபுணரிடம் உதவி கோரவேண்டும். சில வளாகங்களில் ஆலோசகர்கள் இருப்பார்கள், அவர்களை அணுகலாம்.