தங்களுடைய குழந்தை பொறுப்புமிக்கவராக மற்றும் சுதந்தரமானவராக வளரவேண்டும் என்றுதான் எந்தப் பெற்றோரும் விரும்புவார்கள், தங்களுடைய குழந்தைகள் தன்னம்பிக்கையோடு வளரப் பெற்றோர் ஆதரவளிக்கவேண்டும், அவர்கள் தங்களுடைய கனவுகளைத் துரத்துவதற்கு ஊக்கமளிக்கவேண்டும். ஆனால் அவர்கள் உண்மையிலேயே வேறு இடத்துக்குக் குடிபெயரும்போது, பெற்றோர், இளைஞர்கள் ஆகிய இருவருக்குமே அதைக் கையாள்வது சிரமமாக இருக்கலாம். சில நேரங்களில், குறிப்பாக மகள்கள் விஷயத்தில், அவர்கள் கல்விக்காகவோ, பணிக்காகவோ வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை அனுமதிப்பதுபற்றிப் பெற்றோர் அதீத எச்சரிக்கை கொள்கிறார்கள், இதனால் நன்மையைவிட அதிகத் தீமை ஏற்படலாம். தங்களுடைய குழந்தை வெளி இடங்களுக்குக் குடிபெயர்வதை ஆதரிக்க விரும்பும் பெற்றோர் பின்பற்றக்கூடிய சில விஷயங்கள் இதோ:
தங்கள் குழந்தை வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்தபிறகு ஏற்படக்கூடிய தனிமை உணர்வை நினைத்துப் பெற்றோர் அழுத்தம் கொள்ளலாம், சோகமாக உணரலாம், இதனால் அவர்கள் இந்த நிகழ்வுக்காக முன்கூட்டியே தங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும், தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் உலகை வெல்லுவதற்காக வெளியிடங்களுக்குக் குடிபெயர்வதைத் தங்களால் நிறுத்தவே இயலாது என்பதைப் பெற்றோர் தங்களுக்குத் தாங்களே நினைவூட்டிக்கொள்ளவேண்டும், அதேசமயத்தில் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் அவர்களுடன் பேசலாம், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை விசாரிக்கலாம் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
இந்தக் கட்டுரை இந்தியாவில் உரிமம் பெற்ற மருந்துவ உளவியலாளரான போனா கோலகோ உதவியுடன் எழுதப்பட்டது. வளர் இளம் பருவத்தினருடைய மன நலனில் ஆர்வம் கொண்டவர் அவர்.