அநேகமாக ஒரு குழந்தையின் முதல் சமூகத் தொடர்புகள், பெற்றோர்தான். அவர்கள் குழந்தையின்மீது தாக்கம் உண்டாக்குவதுமட்டுமில்லாமல், அதன்மீது அதிகபட்சக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கிறார்கள். பல காரணங்களுக்காகப் பெற்றோர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டைக் காட்டலாம், தங்களையும் அறியாமல் தங்கள் குழந்தையின் தேவைகளைப் புறக்கணிக்கத் தொடங்கலாம். இது பங்கேற்காத அல்லது புறக்கணிக்கிற குழந்தை வளர்ப்புப் பாணி என அழைக்கப்படுகிறது.
குழந்தை வளர்ப்புப் பாணிகள்
குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தை வளர்ப்பின் பாணிகள் பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் தலைப்புகளாகும். டயானா பௌம்ரிண்ட் என்ற நன்கு அறியப்பட்ட வளர்ச்சி உளவியலாளர் 1960களில் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தினார், அதன்மூலம் மூன்று குழந்தை வளர்ப்புப் பாணிகளை விவரித்தார்: அதிகாரம், எதேச்சாதிகாரம் மற்றும் அனுமதித்தல்/இடம் கொடுத்தல். சமீபத்தில் மற்ற ஆராய்ச்சியாளர்கள் இதில் நான்காவது வகை ஒன்றைச் சேர்த்துள்ளார்கள்: பங்கேற்காத குழந்தை வளர்ப்பு.
பங்கேற்காத குழந்தை வளர்ப்புப் பாணியின் பண்புகள் பின்வருமாறு:
பங்கேற்காத குழந்தை வளர்ப்பு குழந்தையை எப்படிப் பாதிக்கிறது?
பெற்றோர் குழந்தை வளர்ப்பை இப்படி அணுகுவதால் அவர்களுடைய குழந்தைக்குப் பல எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு சிறு குழந்தை வீட்டில் தன்னுடைய நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது, திடீரென்று இன்னொரு குழந்தையிடமிருந்து ஒரு பொம்மையைப் பிடுங்குகிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் இதைக் கவனிக்கிறார்கள், ஆனால் இதில் அவர்கள் தலையிடுவதில்லை. இப்போது அந்தச் சிறு குழந்தைக்கு சரியான பழகுமுறை எது, தவறான பழகுமுறை எது என்கிற வேறுபாட்டைப் புரிந்துகொள்ள இயலுவதில்லை, இந்த நேரத்தில்தான், எது ஏற்கப்படுகிறது, அந்தக் குழந்தையின் பழகுமுறை அதனைச் சுற்றியிருக்கிறவர்களை எப்படி புண்படுத்தக்கூடும் என்பதை அதற்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். புறக்கணிக்கும் குழந்தை வளர்ப்பின் சில விளைவுகள்;
சில பெற்றோர் இந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது ஏன்?
பெற்றோர் தாங்களாகவே விரும்பித் தங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிப்பதில்லை. பெற்றோர் தங்களுடைய குழந்தைகளைப் புறக்கணிப்பதற்கான காரணம் வீட்டுச்சூழலாக இருக்கலாம், அவர்கள் சந்திக்கும் வேறு சூழ்நிலைகளாக இருக்கலாம், எடுத்துக்காட்டாக, நிதி நெருக்கடிகள், துணைவருடன் உறவு சார்ந்த பிரச்னைகள், ஒரு துணைவரின் இழப்பு அல்லது பிற நெருக்கடிகள். அதேசமயம், இதனால் குழந்தைக்குக் கடுமையான எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.
தான் பங்குபெறாத பெற்றோராக இருக்கிறோம் என்பதை ஒருவர் எப்படி அறிவது?
குழந்தை பெற்ற ஒருவரிடம் பின்வரும் அறிகுறிகளில் எவையேனும் காணப்பட்டால், அவருடைய குழந்தை புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
இதை எப்படிச் சரிசெய்யலாம்?
தன்னுடைய குழந்தை புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறது, பெரும்பாலும் ஒழுங்கற்றமுறையில் ஆடையணிந்துகொள்கிறது, பள்ளிக்கு ஒழுங்காகச் செல்வதில்லை, பிறரிடமிருந்து கவனத்தைத் தேடுகிறது, பிறரிடமிருந்து விலகியிருக்கிறது, மற்றும் தனிமையில் இருக்கிறது என்பதை ஒருவர் உணர்ந்தால், அவர் அந்தக் குழந்தையுடன் அதிகம் பங்கேற்பது பிரச்னையைத் தீர்க்க உதவும். இதைச் செய்வதற்கான ஒரு வழி, குழந்தையுடன் அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்குவது, அவர்களுடைய வாழ்க்கை மற்றும் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்குவது. குழந்தை எதை விரும்புகிறது, எதை விரும்புவதில்லை என்பதில் ஆர்வம் காட்டுவது, அவர் பள்ளியில் எப்படிச் செயல்படுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவது போன்றவை ஒரு தொடக்கமாக இருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் உள்ள பெற்றோர், இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வந்து ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பின் சரியான பாதைக்குச் செல்லுவதற்கு அவர்களுக்குத் தலையீடு தேவை. இதில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் நிபுணருடைய தலையீடு தேவை. இப்போதைய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளுவதுதான் முன்னேற்றத்துக்கான முதல்படி. கணவன், மனைவியில் ஒருவர் குழந்தையை புறக்கணிக்கிறார், அதை மற்றொருவர் கவனிக்கிறார் என்றால், அவர்கள் தங்களுடைய கணவர் அல்லது மனைவியுடன் இதுபற்றிப் பேசுவது முக்கியம். குழந்தை புறக்கணிக்கப்படுகிறது என்கிற உண்மையைப் பெற்றோர் ஏற்றுக்கொண்டபிறகு அடுத்த படிநிலை, ஒரு நிபணரை அணுகுதல், எடுத்துக்காட்டாக ஒரு குடும்ப மருத்துவர், சிகிச்சை அளிப்பவர் அல்லது ஆலோசகரை நாடிப் பேசலாம். இதைச் செய்வதன்மூலம், குழந்தையுடனான தங்களுடைய உறவில் குறுக்கிடக்கூடிய தங்களுடைய சொந்தத் தனிப்பட்ட பிரச்னைகளை, இது நிகழ்வதற்கு வழிவகுத்த மற்ற பிரச்னைகளைப்பற்றியும் பெற்றோர் உதவியை நாடலாம்.