
மனச்சோர்வின் அறிகுறிகள்: களைப்பு, குற்ற உணர்வு, தான் மதிப்பற்றவர் என்று உணர்வது, எரிச்சல், தூக்கமின்மை, பசி எடுக்காமல் இருத்தல், வழக்கமான செயல்பாடுகளில் ஆர்வம் குறைதல், தொடர்ச்சியான சோகம் அல்லது சோர்வான மனநிலை. இந்த அறிகுறிகளில் சில, மற்ற உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டவர்களுக்கும் வரலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில், மனச்சோர்வு என்பது ஓர் அறிகுறியாக இருக்கலாம், அதன் அடித்தளத்தில் இருக்கும் நோய் வெறொன்றாக இருக்கலாம்.
NIMHANS மனநலப் புனர்வாழ்வுச் சேவைகள் பிரிவுடைய துணைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணப் பிரசாத் இதுபற்றிக் கூறுவது, “உடல் சார்ந்த நோய்கள் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கிடையில் ஓர் இரு திசை உறவு உள்ளது. அதாவது, எளிதில் களைப்படைதல், உடல் வலி மற்றும் நோவு போன்ற மனச்சோர்வின் அறிகுறிகள் உடல்சார்ந்த அறிகுறிகளாக வெளிப்படலாம், அவை வேறு குறைபாடுகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. சில நேரங்களில், ஹைப்போதைராய்டிஸம், ரத்த சோகை மற்றும் வைட்டமின் குறைபாடுகள் போன்ற பல உடல் சார்ந்த நலப் பிரச்னைகள் மனச்சோர்வைப்போல் தோன்றலாம்”.
ஒருவருக்கு மனச்சோர்வுடைய அறிகுறிகள் வருகின்றன என்றால், அவருக்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர் (பொது மருத்துவர் அல்லது மனநல நிபுணர்) மனச்சோர்வுபோல் வெளிப்படும் மற்ற உடல் சார்ந்த பிரச்னைகள் எவையும் அவருக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பலாம். இதுபற்றி நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சிகளின்படி பார்க்கும்போது, பின்வரும் பிரச்னைகள் மனச்சோர்வைப்போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஒருவருக்கு மனச்சோர்வு வந்திருக்கிறதா என்று மதிப்பிடும்போது, மனநல நிபுணர் அவரை உடல்ரீதியிலும் உள்ளரீதியிலும் விரிவாக மதிப்பிடுவார். உடல்ரீதியிலான பரிசோதனைகள் சில: உடல் நிறைக் குறியீடு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச விகிதம் மற்றும் பிற உடல் செயல்களைச் சரி பார்த்தல். மனச்சோர்வின் அறிகுறிகளைப்போன்ற அறிகுறிகளைக் கொண்ட எந்த உடல் பிரச்னைகளும் அவருக்கு இல்லை என்பதை உறுதி செய்வதற்காக அவர்கள் ஒரு ரத்தப் பரிசோதனையையும் பரிந்துரைக்கலாம். இந்த ரத்தப் பரிசோதனையில் பின்வருவன அளவிடப்படலாம்:
மேலே குறிப்பிடப்பட்ட பிரச்னைகளில் பெரும்பாலானவை குணப்படுத்தக்கூடியவை. இதற்காக அவர் ஒரு பொது மருத்துவரை அல்லது நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியிருக்கலாம், இது அவருடைய பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து அமையும். பிற பிரச்னைகளுக்குச் சிகிச்சை பெற்றபிறகும் அவருக்கு மனச்சோர்வின் அறிகுறிகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால் அவர் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியிருக்கலாம்.