பதின்பருவத்தில் இருக்கும் ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியுள்ளார் என்றால், அவருக்கு எந்தத் தொழில்நுட்ப சாதனமும் கிடைக்காதபடி தடுத்துவிட்டால் என்ன தவறு?
இணையம் அல்லது செல்ஃபோனைத் தடைசெய்தால், இளைஞர்கள் திருந்தமாட்டார்கள், எரிச்சலடைவார்கள், கோபமடைவார்கள். சில இளைஞர்களுக்குத் தொலைபேசிகள் அல்லது கணினிகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் தனியே விலகி வாழத்தொடங்கிவிடுவார்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் பேச மறுப்பார்கள். ஆகவே, இதுபோன்ற நேரங்களில் தொழில்நுட்ப சாதனங்களைத் தடுப்பதைவிட, அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதுதான் நல்லது என்று மனநல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். “ஒருவர் ஒரு விஷயத்துக்கு அடிமையாகிவிட்டார் என்றால், அந்த விஷயத்தைத் தடைசெய்தால் அவருடைய பிரச்னை சரியாகிவிடாது" என்கிறார் NIMHANSன் SHUT க்ளினிக்கைச்சேர்ந்த டாக்டர் மனோஜ் ஷர்மா, "உதாரணமாக, புகைபிடிப்பதற்கு எதிரான தடையை எடுத்துக்கொள்ளுங்கள். அது பயன் தருகிறதா என்ன? ஒவ்வொருவரும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும், ஊக்கப்படுத்திக்கொள்ளவேண்டும், அதுதான் இந்தப் பிரச்னையைச் சரியாக்கும்.”
ஒருவர் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
ஒருவர் தேவைக்குமேல் தொலைபேசியில் நேரம் செலவிடுகிறார் என்றால், அவர் தன்னைத்தானே பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம். அதன்மூலம், தான் ஆரோக்கியமானமுறையில்தான் தொலைபேசியைப் பயன்படுத்துகிறோமா என்று தெரிந்துகொள்ளலாம். (அடிமையாதலின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளைப்பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்).
ஒருவர் தன்னுடைய தொலைபேசிக்கு அடிமையாகியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அவர் என்ன செய்யவேண்டும்?
ஒருவர் தனது தொலைபேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விரும்பினால், இந்த வழிகளைப் பின்பற்றலாம்:
தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றினால், சுமார் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ஒருவர் ஆரோக்கியமான பழக்கங்களுக்குத் திரும்பிவிட இயலும்.
இந்தப் பட்டியலை உருவாக்க உதவிய இணையத்தளம்: http://www.nimhans.kar.nic.in/ncw/leaflets2.pdf.
ஒரு குழந்தை தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிறது என்றால், அதன் பெற்றோர் என்ன செய்யவேண்டும்?
ஒரு குழந்தை இணையத்துக்கு அடிமையாகியிருக்கிறது என்றால், அதன் பெற்றோர் கவலைப்படுவார்கள், தங்கள் குழந்தையின் ஆரோக்கியம், படிப்பு என்ன ஆகுமோ என்று எண்ணுவார்கள். அப்படித் தொழில்நுட்பத்துக்கு அடிமையான குழந்தைகளின் பெற்றோருக்குச் சில குறிப்புகள்: