ஒரு குழந்தையை இந்த உலகுக்குக் கொண்டுவருவது என்பது பல கவலைகள் மற்றும் அழுத்தத்தைக் கொண்ட ஒரு செயல்பாடாகும். இந்தக் கவலைகள் மற்றும் அழுத்தங்களில் பெரும்பாலானவை தற்காலிகமானவை, காலப்போக்கில் சரியாகிவிடக்கூடியவை. அதேசமயம், சிலருக்குத் தொந்தரவான எண்ணங்கள் மற்றும் கவலைகள் தொடரலாம், அவர்களால் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்ய இயலாமல் போகலாம், அப்படிப்பட்டவர்களுக்கு போஸ்ட்பார்டம் பதற்றம் ஏற்பட்டிருக்கலாம். எந்த ஒரு புதிய தாயும் குழந்தையின் ஆரோக்கியத்தைப்பற்றி, குழந்தைக்கு என்ன உணவு தருவது என்பதுபற்றிக் கவலைப்படலாம், இவையெல்லாம் மிகவும் இயல்பானவை. ஆனால் இந்தக் கவலைகள் தொடர்ச்சியான தொந்தரவு எண்ணங்களாகவும் பயங்களாகவும் மாறினால் அவருக்கு இன்னொருவருடைய உதவி தேவைப்படலாம்.
போஸ்ட்பார்டம் பதற்றத்தின் அறிகுறிகள், கர்ப்பத்தின்போது ஏற்படுகிற பதற்றத்தின் அறிகுறிகள்போலவே இருக்கும். இந்த அறிகுறிகளில் சில:
ஒரு புதிய தாய் இந்த அறிகுறிகளை அனுபவித்தால் அவர் தன்னுடைய GP அல்லது மகப்பேற்று மருத்துவருடன் பேசலாம், அந்த மருத்துவர் அவரை ஒரு மனநல நிபுணரிடம் அனுப்புவார்.
போஸ்ட்பார்டம் OCD
சில நேரங்களில் புதிய தாய்மார்களுக்கு மிகவும் பயத்தை உண்டாக்கக்கூடிய தொந்தரவான காட்சிகள் திரும்பத் திரும்பத் தோன்றலாம், அதன்மூலம், தங்களுடைய குழந்தைக்குக் காயத்தைக் கொண்டுவரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். போஸ்ட்பார்டம் OCD க்கான சில அறிகுறிகள்:
சிகிச்சை
குழந்தைப்பேற்றுக்கு முந்தைய பதற்றத்தைப்போலவே, போஸ்ட்பார்டம் பதற்றத்தின் சிகிச்சையும் அறிகுறிகளின் தீவிரத்தன்மையைப் பொறுத்து அமைகிறது. இந்த அறிகுறிகள் தீவிரமாக இல்லாவிட்டால், உணர்வு ஆதரவு மற்றும் சிகிச்சை போன்றவை அந்தத் தாய் தன்னுடைய பதற்றத்தைச் சமாளிக்க உதவலாம். அதேசமயம் இன்னும் தீவிரமான அறிகுறிகளைக் கொண்ட தாய்மார்களுக்கு உளவியல் சிகிச்சையுடன் மருந்துகளும் தேவைப்படலாம். அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) அல்லது தனிநபர்களுக்கிடையிலான சிகிச்சை (IPT) போன்ற சிகிச்சைகள் அந்தத் தாய்க்கு உதவக்கூடும். இந்தச் சிகிச்சைகளின் நோக்கம், இந்தத் தொந்தரவான எண்ணங்களின் அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளுதல், அவற்றுக்குப் பதிலாக நல்ல எண்ணங்களைக் கொண்டுவருதல்.