பொதுவாக, பதின்பருவம் அல்லது வளர்இளம்பருவம் என்பது, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு காலகட்டமாக உள்ளது. இந்த வயதில் உள்ளவர்களிடம் அதிவேகமான வளர்ச்சி மாற்றங்கள் காணப்படும், அதுவரை குழந்தைப்பருவத்தில் பாதுகாப்பாக இருந்தவர்கள் இப்போது 'பெரியவர்கள்' என்கிற பருவத்துக்குத் தாவியாகவேண்டும், அதை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்குள் அவர்கள் மனத்தில் ஆயிரம் குழப்பங்கள் உண்டாகும்! ஒருவர் பதின்பருவத்துக்குள் நுழையும்போதுதான், தன்னைப்பற்றிய ஓர் உணர்வு அவருக்குள் பதிகிறது, அவருக்குத் தன்னுடைய உடல்சார்ந்த ஒரு புதிய பிம்பம் உண்டாகிறது, பெற்றோர், சமவயதில் உள்ளோர், மற்ற அன்புக்குரியவர்களுடன் அவருடைய உறவு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. இவற்றின் அடிப்படையிலேயே அந்தத் 'தான் யார்' என்கிற உணர்வு அமைகிறது.
இந்தப் பெரிய மாற்றங்களோடு, படிப்பு அழுத்தம், சமூக அழுத்தம் ஆகியவற்றைச் சேர்த்துப் பார்க்கும்போது, பதின்பருவத்தில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டுகள் மிகவும் முக்கியமானவையாகிவிடுகின்றன. இந்தக் காலகட்டத்தில், இவர்களுடைய பெற்றோரும் இவர்களைத் தொடர்ந்து கவனித்துவரவேண்டும், இவர்களுடைய மனநலனை உறுதிப்படுத்தவேண்டும்.
அத்துடன், இந்தக் காலகட்டத்தில்தான் ஒருவருடைய ஆளுமையின் பெரும்பகுதி உருவாகிறது. பதின்பருவத்தினரின் மூளைப் பகுதிகள் இன்னும் வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன, ஆகவே, அவர்கள் தீர்மானமெடுக்கச் சிரமப்படுகிறார்கள், நேரத்தை மேலாண்மை செய்ய இயலாமல் தவிக்கிறார்கள், இலக்குகளைத் தீர்மானிக்கத் தடுமாறுகிறார்கள், பிரச்னைகளைத் தீர்க்க இயலாமல் திகைக்கிறார்கள் என்றால், அது சகஜம்தான்.
"பதின்பருவத்தினரிடம் பொதுவாகக் காணப்படும் சில பிரச்னைகள்: போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் கவலைகள், தூக்கம் தொடர்பான கவலைகள், ஆரோக்கியமற்ற தூங்கும் பழக்கங்கள், தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் ஆகியவை. பதின்பருவத்தில் உள்ள ஒருவரிடம் இந்தப் பிரச்னைகள் இருந்தால், அதைப்பற்றிப் பதறவேண்டியதில்லை. அதேசமயம், அந்தப் பிரச்னைகள் பெரிதாகி, அவர்களுடைய சமூக மற்றும் தொழில்சார்ந்த (பள்ளி அல்லது கல்லூரி) செயல்பாடுகளைப் பாதிக்கத் தொடங்கினால், அவர்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து உதவிபெறவேண்டியிருக்கலாம்" என்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர் ப்ரியா காயஸ்தா ஆனந்த். இவர் பெங்களூரில் குழந்தைகள் மற்றும் வளர்இளம்பருவத்தினருக்கான உளவியல் சிகிச்சைகளை வழங்கிவருகிறார்.
"பதின்பருவத்தில் உள்ளவர்களுடைய மனநலனுக்கான இரண்டு முக்கியத் தேவைகள்: சுய ஊக்கம் மற்றும் சுய ஒழுக்கம்" என்கிறார் டாக்டர் காயஸ்தா, "அதேசமயம், இந்த இரண்டையும் நோக்கி ஒரு பதின்பருவத்தினரைச் செலுத்துபவை, அவர்களுக்குள் ஏற்படும் திருப்தி மற்றும் மனநிறைவு."
பதின்பருவத்தில் உள்ள ஒருவருடைய தேவைகள்:
பதின்பருவத்தினர் இந்த முக்கியமான காலகட்டத்தைச் சமாளிக்கப் பெற்றோர் எப்படி உதவலாம்?
பதின்பருவத்தில் உள்ளவர்கள் இந்தச் சமாளிப்பு உத்திகளைப் பின்பற்றலாம்:
பதின்பருவத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்துவமானவர், அவர் மற்றவர்களைப்போல் வளர்வதில்லை, அதே வேகத்தில் முன்னேறுவதில்லை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் வளர்இளம்பருவத்தினர் இந்த முக்கியமான வாழ்க்கைநிலையின் செயல்முறையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம், அதன் பலன்களில் அல்ல.