வயதாவதால் ஏற்படும் ஞாபக மறதி ஒரு நபரை முழுமையாக மற்றும் ஆக்கப்பூர்வமாக வாழ்வதிலிருந்து தடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக, வயதான நபர் தனது கண்ணாடி அல்லது சாவியை எங்கு வைத்தார் என்று மறக்கலாம், அல்லது அவர்கள் சிறிது காலம் பார்க்காத ஒருவருடைய பெயரை மறக்கலாம். பெரும்பாலும் இதுபோன்ற நினைவு மாற்றங்கள் தினசரிச் செயல்பாடுகளான, வேலை செய்யும் திறன், சார்பின்றி வாழுதல் அல்லது சமூக வாழ்க்கையை மேற்கொள்ளுதல் போன்றவற்றைப் பாதிக்காது.
ஞாபக மறதி எப்போது டிமென்ஷியாவின் அறிகுறியாகும்?
எல்லா ஞாபகப் பிரச்னைகளும் வயதாவதால் ஏற்படுவதில்லை. வழக்கமாக ஒருவர் டிமென்ஷியாவின் அறிகுறிகளைக் காட்டும்போது, நினைவு தவிர பிற புலன் உணர்வுச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் – கற்றல், நோக்குநிலை, மொழி, விவரித்தல், திட்டமிடுதல், பிரச்னையைத் தீர்த்தல் மற்றும் மதிப்பிடுதல். ஒருவருடைய பெற்றோர் இப்படி இருப்பின் அவர்கள் உதவியை நாட வேண்டி இருக்கலாம்:
இந்த அறிகுறிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவை ஒருவருக்கு இருந்தால், டிமென்ஷியா காரணத்தால் ஏற்படுகிற நினைவு இழப்பின் அடையாளமாக இருக்கலாம்.
அறிகுறிகள் டிமென்ஷியாவை அடையாளம் காட்டினால் என்ன செய்வது?
டிமென்சியா, புலன் உணர்வை, குறிப்பாக நினைவைப் பாதிக்கக்கூடிய ஒரு வளரும் சிதைவு மூளை நோய். டிமென்ஷியாவை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துத் தடுப்பதன்மூலம் ஆபத்துகளைக் குறைக்கலாம் மற்றும் டிமென்ஷியாவின் வெளிப்பாட்டைச் சில ஆண்டுகள் தாமதப்படுத்தலாம். ஒருவர் தன்னுடைய வயதான பெற்றோரிடம் காணப்படும் மறதித்தன்மை டிமென்ஷியாவைக் குறிப்பதைக் கவனித்தால், சூழ்நிலையை மதிப்பிடுவதற்காக ஒரு மனநல நிபுணர் அல்லது நரம்பியல் நிபுணருடன் ஆலோசிக்கவேண்டும்.
நினைவிழப்பானது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மனச்சோர்வு, பதற்றம், வைட்டமின் பி குறைபாடு மற்றும் ஹைப்போதைராய்டிஸத்தாலும் நிகழலாம். இந்தச் சூழ்நிலைகளாலும் டிமென்ஷியா ஆபத்து அதிகமாகலாம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
தீவிர நினைவு இழப்பின் ஆபத்தை இவற்றின் மூலம் குறைக்க அல்லது தடுக்க முடியும்:
NIMHANS முதியோர் மனநலத் துறைப் பேராசிரியர் மரு P T சிவகுமார் அவர்களுடைய உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டது.