மனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண் தாய்மைப்பேறு அடையலாம், அதில் எந்தச் சிரமங்களோ தடைகளோ கிடையாது!
அதேசமயம், அப்படிக் கர்ப்பமாகும் ஒருவர் தனது உளவியல் நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் இருவரிடமும் இதுபற்றிப் பேச வேண்டும், தன்னுடைய மன நலம் மற்றும் கர்ப்பம்பற்றித் தெரிவிக்கவேண்டும், இதன்மூலம் அவர் தன்னுடைய குறைகளை நன்கு கையாண்டு தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தை நன்கு அனுபவிக்க இயலும்.
மனம் சார்ந்த பிரச்னை உள்ள ஒருவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் பேசும்போது பின்வருவனவற்றைக் கண்டிப்பாகக் குறிப்பிடவேண்டும்:
அவருடைய உளவியல் நிபுணரும் மகப்பேறு மருத்துவரும் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதும் நல்லது. இதன்மூலம் மகப்பேறு மருத்துவர் சம்பந்தப்பட்டவரின் நிலையை நன்கு புரிந்துகொள்வார், ஏதேனும் பிரச்னைகள் வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்று தெளிவுடன் இருப்பார்.
மனம் சார்ந்த பிரச்னை உள்ள ஒருவர் தன்னுடைய நலப் பராமரிப்புத் திட்டத்தைப்பற்றியும் மகப்பேறு மருத்துவருக்குத் தெரிவிப்பது நல்லது. இதன் மூலம், இந்த நிலையில் உள்ளவர் எப்படிச் சேவைகளை அணுகுவார், ஏதேனும் பிரச்னைகள் வந்தால் என்ன செய்வது என்பதெல்லாம் தெரியவரும்.
மனம் சார்ந்த பிரச்னை உள்ளவர் தன்னுடைய உளவியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர் இருவரிடமும் ஆலோசனை பெற்று, தனது மனநலப் பிரச்னையைச் சரியானபடி கையாண்டால், ஆரோக்கியமாக கர்ப்பகாலத்தைக் கடந்து குழந்தையை நல்லவிதமாகப் பெற இயலும், குழந்தை பிறந்தபிறகும் அதனை ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்வதற்கு இந்த அனுபவம் உதவும்.